மகன் தயாநிதிக்கு விருது – மதுரையிலிருந்து குடும்பத்துடன் வந்த முக அழகிரி!

6-ம் ஆண்டில் அடியெடுத்து ஆங்கில மாத இதழான ரிட்ஸ் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து இந்த ஐகான் விருதுகளை வழங்குகியுள்ளது.
2010-ம் ஆண்டுக்கான ரிட்ஸ் ஐகான் விருதுகள் இயக்குநர் செல்வராகவன், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, கிராமி விருது பெற்ற முதல் இந்திய இசைக் கலைஞர் தன்வி ஷா, ரேஸ் சாம்பியன் கருண் சந்தோக், ஃபேஷன் டிசைனர் சைதன்ய ராவ், இசைக் கலைஞர் அனில் சீனிவாசன், இளம் தொழிலதிபர் சரத் பாபு, பவுன்ஸ் சலூன் விக்ரம் மோகன், ஈவாம் தியேட்டர் குரூப் சுனிஷ் விஷ்ணு மற்றும் கார்த்திக் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஓட்டல் விருது தாஜ் குழும ஓட்டல்களுக்கும், சிறந்த திரையரங்காக சத்யம் சினிமாஸ், சிறந்த ஸ்பா மையமாக ஏசியானா ஓட்டலின் பிரானா ஸ்பாவும், சிறந்த உணவுக்கு ஜிஆர்டி ராடிஸனும் சிறந்த காலணிகளுக்கு மெட்ரோ ஷூஸ் கடையும் தேர்வு செய்யப்பட்டு விருதளிக்கப்பட்டது. சிறந்த ராக் இசைக்கு பார்க் ஷெராட்டான் ஓட்டல் விருது பெற்றது.
விருது வழங்கும் விழாவை மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக அழகிரி துவங்கி வைத்தார். இயக்குநர் செல்வராகவனுக்கு அவர் விருது வழங்கினார்.
தன் மகன் தயாநிதி அழகிரி விருது பெறுவதைக் காண ஆசைப்பட்டு மதுரையிலிருந்து விழாவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
திரைத்துறையில் தயாரிப்பாளராக ஆன பிறகு தான் வாங்கும் முதல் விருது இதுதான் என்றார் தயாநிதி அழகிரி.
லீ ராயல் மெரிடியனில் நடந்த இந்த விழாவில், ஏராளமான திரையுலக மற்றும் தொழில் துறை விஐபிக்கள் பங்கேற்றனர். அனைவரையும் பிஆர்ஓ ஏ ஜான் வரவேற்றார்.
ரிட்ஸ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான அருணா கிருஷ்ணன் விருது பெற்றவர்களை வாழ்த்தி, நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications