லலித் மோடி-பாஜக தொடர்புகளை விசாரிக்க கோரிக்கை
டெல்லி: லலித் மோடியுடன் பாஜக தலைவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை இணையமைச்சருமான வயலார் ரவி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டி என்பது கறுப்புப் பணத்தைக் கொண்டு ஆடப்படும் சூதாட்டம் தான். இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
அதே நேரத்தில் கிரிக்கெட்டை சூதாட்டமாக மாற்றிய லலித் மோடியை ஆதரித்தும் பாராட்டியும் பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.
இந்த விவாகரத்தில் அமைச்சர்கள் சரத் பவார் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் ஆகியோருக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,
அவர்கள் இருவரும் கிரிக்கெட்டுடன் அதிகமாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் என்பது வேறு என்று மழுப்பலாக பதில் தந்தார் வயலார் ரவி.
பவார்.. வருமான வரித்துறை விசாரணை:
இந்த விவகாரத்தில் பவார் மற்றும் படேலின் செயல்பாடுகள் குறித்தும் வருமான வரித்துறை ரகசியமாக விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications