திருவாரூர் அருகே நடந்த சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர் : திருவாரூர் அருகே காரும், லாரியும் மோதிக் கொண்டதில் கேரளாவைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எர்ணாகுளம் கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குரியன் (75). உறவினர் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு காரில் புறப்பட்டார். நேற்று காலை 5.30 மணிக்கு திருவாரூர் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக திருவாரூர் அம்மையப்பன் அருகே தென்கரை என்ற இடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜல்லி லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

இதில காரில் பயணம் செய்த மேத்யூஸ் (35), லைலா (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும், காரில் பயணம் செய்த குரியன், அவரது மனைவி தங்கம்மாள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனே சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் உடனே தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தங்கம்மாள் (55) மற்றும் ஜான் ஜோசப் (12) சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெக்டர் (27), லைமி (ஒன்றரை), லைமி ஜோசப் (35), ஜோனா ஜோசப் (10) ஆகிய 4 பேரும் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+