தென் கொரிய போர் கப்பலை மூழ்கடிதது வட கொரிய நீர்மூழ்கி?

கம்யூனிஸ்ட் நாடான வட கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியாவுக்கும் இடையே 1953ம் ஆண்ட போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
வட கொரியாவுக்கு சீனா மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா நேரடியாக உதவி வருகிறது. தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ளன.
இரு நாட்டுப் படைகளும் எல்லைப் பகுதியில் அவ்வப்போது மோதிக் கொள்வதும், போட்டி போட்டு ஏவுகணை சோதனைகளை நடத்துவதுமாக உள்ளன. ஈரான், பாகிஸ்தானின் உதவியோடு வட கொரியா அணு ஆயுதத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில் தான் கடந்த மார்ச் மாதத்தில் தென் கொரிய போர்க் கப்பல் மர்மமான முறையில் சிதறடிக்கப்பட்டு மூழ்கியது. இதில் 46 வீரர்கள் பலியாயினர். கப்பலில் ஏதாவது வெடிவிபத்து நடந்து மூழ்கியதா அல்லது வட கொரியாவின் நீர்மூழ்கியுடன் தவறுதலாக மோதி சிதறியதா என்ற விசாரணை நடந்தது.
இந் நிலையில் இந்தக் கப்பலை ஒரு நீ்ர்மூழ்கி ஏவுகணை தான் சிதறடித்ததாக இப்போது ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஏவுகணையை வட கொரிய நீர்மூழ்கிக் கப்பல் தான் செலுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் இரு நாடுகளிடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications