இந்திய ராணுவத்தில் தமிழர்கள் 5.14%!
திண்டுக்கல்: இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5.14 சதவீதம் பேர் பணியாற்றி வருவதாக துணை ஜெனரல் வராட்கர், கர்னல் வர்கீஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
ராணுவத்திலுள்ள பல்வேறு பதவிகளுக்கு திண்டுக்கலில் இளைஞர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில், 2007ம் ஆண்டுக்கு பின்பு தற்போது ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. தற்போது நடக்கும் முகாமில் இதுவரை 10,000 பங்கேற்றுள்ளனர். இதில் 1,700 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஜூன் 30ம் தேதி 600 பேருக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். ஜூலை கடைசியில் மீதியுள்ளவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
வரும் 2011ம் ஆண்டு மார்ச் முதல் ஆன்-லைனில் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தேர்வுக்கு வரும் அனைத்து இளைஞர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படு்ம். இதன் மூலம் போலியான நபர்கள் உள்ளே புகுவதற்கும் வாய்ப்பில்லை.
இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5.14 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications