Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேலவை: ஆந்திர நடைமுறையே தமிழகத்திலும் பின்பற்றப்படும்-குப்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்ட மேலவை அமைக்கும் விஷயத்தில் ஆந்திராவில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தமிழகத்திலும் பின்பற்றப்படும்.

தமிழக சட்ட மேலவையில் 78 உறுப்பினர்கள் இடம் பெறுவர் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் மேலவை அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மொத்தமுள்ள 78 பேரில் 26 உறுப்பினர்களை எம்எல்ஏக்களும், 26 உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், 7 பேரை பட்டதாரிகளும், 7 பேரை ஆசிரியர்களும் தேர்ந்தெடுப்பார்கள்.

மீதியுள்ள 12 பேர் பல துறைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்களுக்கான தொகுதிகள், பட்டதாரி தொகுதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குரிய தொகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்து அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளை மாவட்டவாரியாகத்தான் அமைக்க முடியும்.

தமிழ்நாட்டில் மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை அறிவதற்காக தமிழக தேர்தல் துறை கூடுதல் செயலாளர் சந்தானகிருஷ்ணன் சமீபத்தில் ஆந்திரா சென்று வந்தார். அவர் அங்கு ஓய்வு பெற்ற மூத்த தேர்தல் அதிகாரி சி.ஆர்.பிரம்மம் என்பவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார். பிரம்மம் அவர்களையும் இந்தத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள எண்ணி உள்ளோம்.

சட்ட மேலவை அமைக்கும் விஷயத்தில் ஆந்திரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தமிழகத்திலும் பின்பற்றப்படும்.

மேல்வைத் தேர்தலை நடத்த பல்வேறு விதமான பணிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக வாக்களிக்கும் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். அது தொடர்பான புள்ளி விவரங்கள், பல்கலைக்கழகங்கள், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்படும்.

இத்தேர்தலுக்காக பட்டதாரிகளும், ஆசிரியர்களும் தாமாகவே முன்வந்துதான் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது வாக்காளர் பட்டியலை போல இந்த பட்டியலை தயாரிக்க முடியாது. எனவே, இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஆந்திராவில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றவர்களும், பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க ஓட்டு ப்போடலாம் என்ற விதி உள்ளது. தமிழ்நாட்டில் அது போன்று அனுமதிக்க முடியுமா என்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் மேல்வைத் தேர்தலை நடத்துவது புதிய அனுபவம். எனவே அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியம்.

தேர்தல் அதிகாரி, உதவித் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டியுள்ளது. இவை பற்றியெல்லாம் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆந்திராவில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி புதிய மேலவை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கி 2007 மார்ச் மாதம்தான் நிறைவு பெற்றுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் எப்போது இந்தத் தேர்தல் நடக்கும் என்று இப்போதே சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பக் கட்ட தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன என்றார் நரேஷ் குப்தா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+