குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம்

புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.
சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். அதன்பிறகு அவரைப் பற்றி வெளிப்படையான செய்திகள் எதுவும் இல்லை என்றாலும், அவர் அரசாங்க சாட்சியாக மாறி, புலிகளின் சொத்துக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.
ராஜபக்சே சகோதரர்கள் தேர்தலைச் சந்தித்ததே கேபியால் காட்டிக் கொடுக்கப்பட்ட புலிகளின் நிதி ஆதாரங்களை வைத்துதான் என்று கூறப்பட்டது.
ராஜபக்சே சகோதரர்களுடன் இணக்கமாகப் போய்விட்டதால் கேபிக்கு ராணுவ முகாமில் ராஜ உபசாரம் நடப்பதாகவும், கோத்தபாய போன்றவர்களுடன் அவர் இணக்கமான உறவில் இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கேபிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசுத் தரப்பிலிருந்தே செய்திகள் கசியத் துவங்கியுள்ளன.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஊடகத் துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவும் இதுபற்றி சூசகமான தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "குமரன் பத்மநாதன் ஒரு காலத்தில் அரசன் போல வாழ்ந்து வந்தவர். எனினும் தற்போது அவர் தமது பெருமைகள் அனைத்தையும் இழந்து சாதாரணமாக வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு இப்போது பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையில் அரசு உள்ளது. அதற்கான சாத்தியங்களும் அதிகம் உள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவருக்கு அரசாங்க பதவி எதுவும் வழங்கப்படுமா என்பதை அரசாங்கத்தின் உயர் மட்டம்தான் தீர்மானிக்கும்..." என்றார்.
'இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டவர் கேபி'
கேபிக்கு தண்டனை எதுவும் கிடையாதா? என்று இந்த பேட்டியின் போது கேஹலியவிசம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "தமது இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டதாலேயே கேபி இப்போது தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் பல்வேறு தரப்புக்களையும் அரசாங்கத்தினால் முடக்கமுடிந்தது. எனவே அவருக்கு தண்டனை தேவையில்லை என்றே அரசு கருதுகிறது" என்றார் கேஹலிய ரம்புக்வெல.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications