For Daily Alerts
Just In
ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேசியக் கட்சி அந்தஸ்து பறிபோகிறது
டெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கான தேசியக் கட்சிக்கான அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பீகாரில் படு தோல்வியைச் சந்தித்தது லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம். ஆட்சியையும் இழந்தது. அதேபோல, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலிலும் லாலு கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்வி காரணமாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தேசியக் கட்சிக்கு இருக்க வேண்டிய தகுதி உங்களது கட்சிக்கு இல்லை என்பதால் ஏன் அந்த அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜூலை 2ம் தேதி தேர்தல் ஆணையம் கூடி முடிவெடுக்கவுள்ளது.
Comments
Story first published: Sunday, June 20, 2010, 14:39 [IST]