For Daily Alerts
Just In
நித்யானந்தாவுடன் கெளடா கட்சி எம்எல்ஏ சந்திப்பு ஏன்?
பெங்களூர் மாகடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இவர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முன்னணி தலைவராவார்.
நேற்று மாலை இவர் பெங்களூர் பிடுதியில் உள்ள தியான பீடம் ஆசிரமத்தில் நித்யானந்தாவை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார்.
ஆசிரமத்தை வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் நித்யானந்தா சிறையிலிருந்து விடுதலையானார்.
கடந்த 10 நாட்களாக ஜாமீனில் உள்ள அவரை விஐபிக்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. இந் நிலையில் கெளடா கட்சியின் முக்கியத் தலைவர் அவரை ஏன் சந்தித்தார் என்று தெரியவில்லை.
இந்த சந்திப்பு குறித்து பாலகிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, அது என் சொந்த விஷயம்.. .விளக்கம் சொல்ல ஏதுமில்லை என்றார்.
Story first published: Tuesday, June 22, 2010, 12:17 [IST]