கொடநாடு டீ பேக்டரில் நேற்று சோதனை இல்லை-உரிய நேரத்தில் ஆய்வு என அதிகாரி தகவல்
ஊட்டி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கியுள்ள கோடநாடு எஸ்ட்டேடில் கட்டப்பட்டு வரும் டீ பேக்டரி குறித்து நேற்று நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சோதனை நடக்கவில்லை. மாறாக உரிய நேரத்தில் அது நடைபெறும் என விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி உதயச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் தேதி கோவையில் முதல்வர் கருணாநிதியுடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவர் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு பெரிய டீ பேக்டரி கட்டி வருகிறார். அந்த டீ பேக்டரி அரசு விதி முறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது என்றும், அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், இந்த செய்தி புதிரானது என்றும், எனினும் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தப் பிரச்சனை குறித்து உரிய முறையில் விசாரித்து உண்மைத் தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பிரச்சனை பற்றி பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு அரசுக்கு விரைவில் அறிக்கை தருவார் என அரசு தெரிவித்திருந்தது.
இந் நிலையில் நேற்று கொடநாடு எஸ்டேட் டீ பேக்டரி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்ப விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரன் ஊட்டிக்கு வந்தார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. கோடநாடு எஸ்டேட்டுக்கு முன்பாக அதிமுகவினர் குவிந்தனர்.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இருப்பினும் உதயச்சந்திரன் சோதனைக்கு வரவில்லை. மாறாக விருந்தினர் மாளிகையில் இருந்தபடி விசாரணையை தொடங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அர்ச்சனா பட்நாயக், கோடநாடு ஊராட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரி குப்புசாமி சகிதம், ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, நகர ஊரமைப்புத்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோடநாடு எஸ்டேட் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினேன். ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவியியல் துறை, நகர ஊரமைப்புத்துறை, வனத்துறை, வருவாய் துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடநாடு ஊராட்சி உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணைகக்கு பின்னர் கோடநாடு எஸ்டேட்டில் உரிய நேரத்தில் கள ஆய்வு செய்யப்படும் என்றார்.
நேற்று சோதனை நடைபெறவில்லை என்ற போதிலும் தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பகுதியில் அதிமுக தொண்டர்கள் முகாமிட்டபடி உள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications