சிறுவர் இல்லத்தில் பாலியல் பலாத்காரம்: காப்பக உரிமையாளர் கைது
அகத்தீஸ்வரம்: கன்னியாகுமரி அருகே அகத்தீஸ்வரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியை அடுத்த அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் அகத்தீஸ்வரத்திற்கு அருகில் உள்ள பூஜபுரைவிளையில் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார்.
இதில் 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 18 பெண் குழந்தைகள் உள்பட 32 குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் இக்காப்பகத்தில் தங்கி படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றுபேர் தாங்கள் கொடுமைப்படுத்தபடுவதாகவும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் நாகராஜன், நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் சகிலா பானு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரி, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் பால்துரை, தென்தாமரை குளம் எஸ்.ஐ. ஜெசி ஆகியோர் அகத்தீஸ்வரம் சென்று அந்த காப்பகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது சிறுவர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதில் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டதும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளில் 16 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகள் நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெஸ்டினை கைது செய்தனர். ஜெஸ்டின் கடந்த 2002-ம் ஆண்டு பள்ளி சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications