பார்வதி அம்மாள் விரும்பினால் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பார்வதி அம்மாள் விரும்பினால் அவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பார்வதி அம்மாள் முன்பு சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது இந்திய அரசு அவரை இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மத்திய அரசே ஏற்பாடு செய்து, அவரை அழைத்து வர உத்தரவிடக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப்பே தர்மாராவ், கே.கே.சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் கூறுகையில், பார்வதி அம்மாளின் பிரதிநிதிகள் யாரும் வந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் சிகிச்சை பெற அவர் விரும்புவதாக கூறினால் மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு அவரை அனுமதிக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ள மற்ற விவரங்கள் குறித்து மற்றொரு விசாரணையில் முடிவு செய்யலாம். இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டனர்.