சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
சேலம்: சேலம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர்கள் தேவை என பல்வேறு
இடங்களிலும் பிட் நோட்டீஸ் ஒட்டிய தனியார் மருத்துவமனைக்கு கடும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் ஷாரோன் மருத்துவமனை என்ற தனியார்மருத்துவமனை
சார்பில் ஒரு பிட் நோட்டீஸ் வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் மருத்துவர்கள் தேவை, தகுதி எம்.பி.பி.எஸ் என போட்டு வைத்திருந்தனர்.
இதுபோல பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் இதுபோல பிட் நோட்டீஸை ஒட்டி
வைத்துள்ளன.
ஹவுஸ் சர்ஜன் பயிலும் மாணவர்களை இழுக்கவே இதுபோன்ற நோட்டீஸ்கள்
ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிலும்
ரகசியமாக பணியாற்றுகிறார்களாம்.
இதுகுறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் புகார்தரப்பட்டுள்ளது. மேலும்
சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு
மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் தெரிவித்தார்.
மேலும் ஹவுஸ் சர்ஜன் மாணவர்கள் இங்கு வேலை பார்க்கக் கூடாது எனவும்
உத்தரவிடப்பட்டுள்ளதாம்.