தமிழகத்தில் காங்.க்கு ஒரு அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே: இளங்கோவன் ஆதங்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 36 பேர் இருந்தும் ஒரு மாநில அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அவர் பேசுகையில்,
காங்கிரசாரின் வேண்டுகோளை ஏற்று ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைத்த தமிழக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள ஈர்ப்பு அதிகரித்துள்ளது. 15 மக்களவை உறுப்பினர்களை கொண்ட திமுக-விற்கு 5 மத்திய அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 36 பேர் இருந்தும் ஒரு மாநில அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை.
பதவியை கிடைக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது. மக்களின் தேவைகளை காங்கிரசார் கோரிக்கையாக முன்வைக்கும்போது, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்தால் போதுமானது என்றார்.












Click it and Unblock the Notifications