அழகிரிக்காக ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியதாக ஜெ. கூறுவது தவறு-திமுக
தேனி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்ட நலத் திட்ட விழாவில் வழங்குவதற்காக லாரியுடன் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேனி மாவட்ட திமுக மறுத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடமலைக்குண்டில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 18 ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பொதுமக்களுக்கு, திமுக சார்பில் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, அடிப்படை ஆதாரமற்ற புகாரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை, பொதுமக்களுக்கு திமுக அளித்த உதவியை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. முகாமில், 200 கிராம் எடையுள்ள ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பாட்டில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் தேனியில் வாங்கப்பட்டவை. அதற்கான ரசீதும் உள்ளது. அவ்வாறிருக்க, உண்மைக்குப் புறம்பாக லாரியில் திருட்டுப் போன ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள், முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரது அரசியல் காழ்ப்புணர்வைக் காட்டுவதாக உள்ளது.
ஜெயலலிதா தனது புகாரை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார் மூக்கையா.












Click it and Unblock the Notifications