வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற முயற்சி
கொழும்பு: வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரமேச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையி்ல், தமிழர் பிரச்சனைக்கு முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் செயல்படும் தமிழர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது குறித்து வலியுறுத்தவில்லை.
வன்னியின் பெரும் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
வன்னிப் பகுதியில் ராணுவத்தினரோடு சுமார் 4 லட்சம் சிங்களர்களையும் இலங்கை அரசு குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கும், தமிழ் கூட்டமைப்புக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறி வருகிறது.
இலங்கை வரவுள்ள இந்திய சிறப்புத் தூதர், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளை இலங்கை அரசின் வழிகாட்டுதலின்றி, இந்தியத் தூதரின் துணையோடு பார்வையிட வேண்டும் என்றார்.
பிரபாகரன் தாயாருடன் தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சந்திப்பு:
இந் நிலையில் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சந்தித்தார்.
இப்போது பருத்தித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது, மருத்துவமனையின் தலைமை அதிகாரி மயிலேறு பெருமாள், ஸ்ரீதரனிடம் பார்வதியம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications