வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற முயற்சி
கொழும்பு: வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரமேச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையி்ல், தமிழர் பிரச்சனைக்கு முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் செயல்படும் தமிழர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது குறித்து வலியுறுத்தவில்லை.
வன்னியின் பெரும் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
வன்னிப் பகுதியில் ராணுவத்தினரோடு சுமார் 4 லட்சம் சிங்களர்களையும் இலங்கை அரசு குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கும், தமிழ் கூட்டமைப்புக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறி வருகிறது.
இலங்கை வரவுள்ள இந்திய சிறப்புத் தூதர், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளை இலங்கை அரசின் வழிகாட்டுதலின்றி, இந்தியத் தூதரின் துணையோடு பார்வையிட வேண்டும் என்றார்.
பிரபாகரன் தாயாருடன் தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சந்திப்பு:
இந் நிலையில் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சந்தித்தார்.
இப்போது பருத்தித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது, மருத்துவமனையின் தலைமை அதிகாரி மயிலேறு பெருமாள், ஸ்ரீதரனிடம் பார்வதியம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications