மேலவை சட்டசபையின் 'கார்பன் காப்பி' ஆகிவிடக் கூடாது!
சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள சட்டமேலவை, அரசியல் அரங்கமாக மாறிவிடக்கூடாது. அது சட்டசபையின் கார்பன் காப்பி'யாக இருக்க கூடாது என்று முன்னாள் மேலவை உறுப்பினர் டாக்டர் எச்.வி.ஹண்டே கூறினார்.
சென்னையில் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழக சட்ட மேலவை தேர்தல் குறித்த ஆய்வரங்க கூட்டம் நடந்தது.
இந்தப் பேரவையின் தலைவர் .ஜனார்த்தனம் பேசுகையில், தமிழகத்தில் அமைய உள்ள மேலவைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் சட்டமுன் வடிவுகளை மேலவையில் விவாதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மேலவையை அமைக்க வேண்டும் என்றார்.
முன்னாள் பட்டதாரி தொகுதி மேலவை உறுப்பினரான டாக்டர் எச்.வி.ஹண்டே பேசுகையில், தமிழக அரசு கொண்டு வர உள்ள மேலவை வரவேற்கத்தக்கது. இதன் நோக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால், சட்டசபைக்கும், மேலவைக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.
மேலவை சட்டசபையின் கார்பன் காப்பி'யாக இருக்க கூடாது. மேலும், அரசியல் அரங்கமாக மாறி விடக்கூடாது என்றார்.
நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தமிழறிஞர் பெ.முருகவேலுக்கு நற்றமிழ் விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications