விமான பயணிகளிடமிருந்து ரூ. 1 கோடி மின்னணுப் பொருட்கள் பறிமுதல்-மூவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த மூவரும் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்தனர். வழக்கமான பரிசோதனையின்போது அவர்கள் மூவரும் ரூ. 1 கோடி மதிப்புள்ள மின்னணுப் பொருட்களை உரிய சான்றுகள் இன்றி கொண்டு வந்தது தெரிய வந்தது.
கொழும்பு வழியாக இந்த மூவரும் சென்னை வந்தனர். இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications