Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் விதவைகளாக 68,000 தமி்ழ்ப் பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் 68,000 தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்த விதவைகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதில், தமிழ் இளைஞர்கள் பலர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது.

இதை தொடர்ந்து தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு தோராயமான கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

இதில், 68,000 பெண்கள் விதவைகளாக இருப்பது தெரிய வந்தது.

இவர்களது கணவர்களை இலங்கை ராணுவம் போரில் கொன்று குவித்துள்ளது. மேலும், கடந்த 2004ம் ஆண்டு எற்பட்ட சுனாமியிலும் பல ஆண்கள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் தமிழர்கள் பகுதியில்தான் மிக அதிக அளவில் விதவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இங்கு தோராயமாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மிக துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

விதவைகளுக்கு ரேஷன் மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+