தீவிரவாத தாக்குதல் சதி-இந்தியர் உள்பட 2 பேர் கனடாவில் கைது

Subscribe to Oneindia Tamil

டோரன்டோ: கனடாவில் தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டமிட்டு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியர்.

கைது செய்யப்பட்டவர்களில் மிஸ்பாருதீன் அகமது என்பவர் இந்தியர். மற்றவர் பெயர் அகமது நிசான். இருவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனராம். கனடாவில் உள்ள மின் நிலையங்களைத் தகர்கக் திட்டமிட்டிருந்தனராம்.

கனடாவில் இருந்து தான் அமெரிக்காவுக்கு அதிக அளவு மின்சாரம் செய்கிறது. மேலும் நியூயார்க் நகருக்கு தேவையான ஒட்டு மொத்த மின்சாரமும் கனடாவில் உள்ள கியூபெக் மின் நிலையத்தில் இருந்து தான் செல்கிறது. எனவே இந்த மின் நிலையங்களையும், மின்சாரம் செல்லும் பாதையையும் தகர்த்து அமெரிக்காவை இருளில் மூழ்கடிக்க இருவரும் திட்டமிட்டிருந்தனராம்.

இந்த செயலைச் செய்வதற்காக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இவர்களுக்கு அல் கொய்தா அமைப்பினர் பயிற்சியும் அளித்துள்ளனர். மிஸ்பாருதீன் அகமது, ஒட்டாவா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எக்ஸ்ரே ஊழியராக பணியாற்றி வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+