தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் சட்டவிரோதமானது-ஜெ.
சென்னை: தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் வெளிப்படையாக நடைபெறவில்லை. நான் கேட்ட தகவல்களை அரசு தரவில்லை. சட்டத்திற்குப் புறம்பான செயல் இது என்பதால்தான் தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான கூட்டத்தை நான் புறக்கணித்தேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2005-ஆம் ஆண்டு தகவல் உரிமை சட்டத்தின்படி, தலைமைத் தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.
2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் தேர்வு செய்யப்படும் ஓர் அமைச்சர் தான் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமே தவிர, பிரதிநிதிகளை நியமிப்பதற்கான உரிமை குழு உறுப்பினர்களுக்குக் கிடையாது.
2005-ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்த போது நடைபெற்ற கூட்டத்தில், கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் அன்பழகன் கலந்து கொண்டார்.
குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, குழுவின் உறுப்பினர் என்ற முறையில் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அரசிடம் கோரியிருந்தேன். ஆனால், அரசு அந்த விவரங்களை அளிக்கவில்லை.
எனவே, எந்த விதமான விவரமும் இன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க முடியாது என்பதால் தான் அந்தக் கூட்டத்திற்கு செல்லவில்லை. நான் கோரிய விவரங்களை அரசு அளித்திருக்குமேயானால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்.
மேற்படி குழுவில் எதிர்க்கட்சித் தலைவரை நியமித்ததற்குக் காரணமே, வெளிப்படையான முறையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.
நான் கோரிய விவரங்களை தி.மு.க. அரசு அளிக்காததால் தான் தலைமை தகவல் ஆணையர் நியமனக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதையும்; நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எனக்கு விவரங்கள் அளிக்காமல் தலைமை தகவல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், இந்த நியமனம் வெளிப்படையான முறையில் நடைபெறவில்லை என்பதையும், தி.மு.க. அரசின் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications