விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர் உள்ளிட்ட இருபெண்கள் மீட்பு!
டெல்லி: டெல்லி விபச்சார விடுதியில் விற்கப்பட்ட கால்சென்டர் ஊழியர் உள்ளிட்ட இரு பெண்களை டெல்லி போலீசார் மீட்டனர்.
பெங்களூரில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 20 வயது பெண் ஒருவரை சில மாதங்களுக்கு முன் பாபுலால் என்ற ஆட்டோ டிரைவர் தொடர்பு கொண்டான். டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அவரை அழைத்துச் சென்ற பாபுலால், மத்திய டெல்லியில் உள்ள ஒரு விபசார விடுதியில் 2 மாதங்களுக்கு முன்பு விற்று விட்டான்.
கடந்த மாதம், பெங்களூரைச் சேர்ந்த 2 குழந்தைக்கு தாயான 25 வயது பெண் ஒருவரையும் அவன் அதே விபசார விடுதியில் விற்றுள்ளான். அந்த விடுதிக்கு வழக்கமாக செல்லும் இளைஞர் ஒருவரிடம், அந்த இரு பெண்களும் தங்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது குறித்து தெரிவித்து மீட்கக் கோரினர்.
அந்த இளைஞர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி ஜி.பி. ரோட்டில் உள்ள விபசார விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த 2 பெண்களையும் விடுவித்த போலீசார், விபசார விடுதியை நடத்தி வந்த சாரதா (28) என்ற பெண்ணையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications