சட்டமன்றத் தேர்தல்: தமிழக இறுதி வாக்காளர் பட்டியல்-நாளை வெளியீடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும். இந்த ஆண்டும் இந்தப் பணிகள் ஜனவரியில் தொடங்கின.
பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கலுக்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு பெயர்களைச் சேர்க்க 31 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் மதுரையில் தான் மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களை சரி பார்த்து முறையான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர்.
தமிழகத்தில் முன்பு 4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தனர். இப்போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
மேலும் விரைவிலேயே இந்தப் பட்டியல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையத் தளத்தில் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications