வெனிசூலாவில் விமானம் விழுந்து விபத்து-15 பேர் பலி-32 பேர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil

மொத்தம் 47 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். அவர்களில் 4 பேர் ஊழியர்கள் ஆவர். ஏடிஆர்-42 ரக விமானமான அது மானுவேல் கார்லோஸ் பியார் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியது.
மார்கரிடா தீவில் தரையிறங்கி பின்னர் விமானம் கிளம்பியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானியிடமிருந்து தகவல் வந்துள்ளது. அதன் பின்னர் அது விபத்துக்குள்ளாகி விட்டது.
கீழே இருந்த அரசுக்குச் சொந்தமான இரும்பு ஆலை மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது.
இந்த விபத்தில் அந்த ஆலையில் இருந்த யாரும் காயமடையவில்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications