தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்-விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்
டெல்லி: வருடத்தில் ஐந்து மாதங்கள் வரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசு கூறியிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். கோகலே, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்காக கொண்டு வந்த சட்டம் குறித்து நீதிபதிகள் சில கேள்விகளைக் கேட்டனர்.
அவர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகை ஜனவரி மாதத்தோடு முடிந்து போகிறது. ஆனால் ஐந்து மாதங்கள் வரை ஜல்லிக்கட்டை நடத்த வகை செய்துள்ளீர்கள். அதாவது வருடம் முழுவதும் பொங்கலையும், ஜல்லிக்கட்டையும் கொண்டாட விரும்புகிறீர்கள். இது எப்படி சரியாகும்.
இந்த சட்டத்தில் அரசு சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் வழக்கை அக்டோபர் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தல் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டை நடத்தலாம். அதற்காக அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகலை கடைப்பிடிக்க வேண்டும். ரூ. 2 லட்சம் காப்புத் தொகையை போட்டி அமைப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications