திருச்சியில் கன மழை: திருவானைக்காவல் கோவில் கோபுரம் மின்னல் தாக்கி சேதம்
ஸ்ரீரங்கம்: திருச்சியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்தது. இதில் கோபுரத்தில் இருந்த இரண்டு சாமி சிற்பங்கள் இடிந்து விழுந்தது.
திருச்சியில் உள்ள திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் ஐந்து பிரகாரங்களைக் கொண்டது.
திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் கோவிலில் இடி விழுந்தது.இதில் கோபுரத்தின் கிழக்கு பகுதியில் இரண்டு இடங்களில் சாமி சிற்பங்கள் இடிந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications