அதிமுக.. இல்லாட்டி திமுகவுடன் கூட்டணி-கொங்கு இளைஞர் பேரவை
சேலம்: தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அது முடியாத பட்சத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசுவோம் என்று கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொங்கு இளைஞர்கள் பேரவை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு நிர்வாகிகள் மீது வன்முறையை ஏவி விட்டும், பொய் வழக்குகளையும் ஆளும் திமுக அரசு தொடர்ந்து வருகிறது. நாங்கள் அந்த அடக்குமுறையை சந்தித்து எங்கள் பணியை ஆற்றி வருகிறோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அது முடியாத பட்சத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசுவோம். கூட்டணி அமையாத நிலையில் தேர்தலில் 30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறோம்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் தருவதை வன்மையாக கண்டிக்கிறோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications