ரூ 15000 ஐ நெருங்கும் தங்கம் விலை!
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ 15000 ஆக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கல்யாணம் மற்றும் பண்டிகை சீஸன் என்பதால் இந்த விலை உயர்வு மக்களுக்கு பெரும் அச்சத்தைத் தந்துள்ளது.
தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், சர்வதேச அளவில் கச்சா பொருட்களின் விலை காரணமாகவும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.14 ஆயிரத்தை எட்டிய தங்கம் தற்போது ரூ.15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,799-க்கு விற்பனையானது. பவுன் தங்கம் ரூ.14,392-க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.19 அதிகரித்து ரூ.1,818-க்கு விற்பனையானது. பவுன் தங்கம் ஒரே நாளில் ரூ.152 அதிகரித்து ரூ.14 ஆயிரத்து 544-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விலை உயர்வு அதிகரித்த போதும் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications