முதல்வர் கருணாநிதி பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் பஸ் மோதி எஸ்.ஐ. பலி!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: முதல்வர் கருணாநிதி பாதுகாப்பு சென்ற போலீஸ் பஸ் மோதி எஸ்.ஐ. பரிதாபமாக பலியானார்.
தர்மபுரி மாவட்டம். போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வந்தவர் அண்ணாத்துரை (45). இவர் பைக்கில் தனது சொந்த வேலை காரணமாக தர்மபுரிக்கு சென்றார்.
இவர், மதிகோன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முதல்வர் கருணாநிதி பாதுகாப்புக்காக போச்சம்பள்ளியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்ட போலீஸ் பஸ் வந்தது.
அப்போது திடீரென்று போலீஸ் பஸ், எஸ்.ஐ.அண்ணாதுரை பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எஸ்.ஐ. அண்ணாத்துரை உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications