ஆலங்குடியில் மீண்டும் ஒரு கொலை-மாஜி அமைச்சரைத் தொடர்ந்து திமுக செயலாளர் படுகொலை
புதுக்கோட்டை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே இன்னும் மறையாத நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திமுக செயலாளர் ஒருவர் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் ஆலங்குடியில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட பதட்டம் அடங்க ஒரு வாரத்திற்கு மேல் ஆனது.
இந்த நிலையில் இன்றுகாலை திமுக செயலாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆலங்குடி தி.மு.க செயலாளராக இருந்தவர் மணிமாறன். இவர் இன்று காலை ஆலங்குடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கபப்ட்டுள்ளன. பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆலங்குடியில் போலீஸார் வரவழைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications