சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி கொடுத்துள்ள இறுதி அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இருப்பினும் ராஜா பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திமுக கூறி விட்டது.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. சிஏஜி என்பது ஒரு கணக்கு தணிக்கை அமைப்பு மட்டுமே. இதன் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கிளம்பினால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் இளங்கோவன்.











Click it and Unblock the Notifications