ஈரோட்டில் ரூ 11 கோடியில் மஞ்சள் வணிக வளாகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு நகரில் ரூ 11 கோடி செலவில் புதிய மஞ்சள் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏ விடியல் சேகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், "ஈரோடு கருமாண்டி அருகே 7.34 ஏக்கரில் ரூ. 11 கோடியில் மஞ்சளுக்கு வணிக வளாகம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்பட உள்ளது.

வருகிற 14-ந்தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று அடிக்கல் நாட்ட இருக்கிறார். இது பிற்காலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் விஸ்தரிக்கப்படும். அந்த அளவுக்கு அங்கு அரசு இடம் உள்ளது..." என்றார்.

சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகளுக்கு ஈரோடு நகரம்தான் முக்கிய மஞ்சள் சந்தையாக திகழ்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+