பாபுவா நியூ கினியாவில் பள்ளி மாணவனை கற்பழி்த்த 10 பெண்கள்: போலீசார் வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சிட்னி: பாபுவா நியூ கினியாவில் 17 வயது பள்ளி மாணவனை 10 பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து தெற்கு பிராந்திய போலீஸ் கமாண்டர் டெட்டி டெய் கூறியதாவது,

கடந்த வெள்ளிக் கிழமை மென்டியில் ஒரு பள்ளி மாணவனை பெண்கள் கும்பல் ஒன்று கத்தியால் தாக்கி கடத்திச் சென்றது.

இந்த மிருகத்தனமான செயலைச் செய்தவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மாணவனை சமையல் கத்தியால் தாக்கியுள்ளனர். மேலும், 4 பெண்கள் அவனுடன் பலவந்தமாக உடல் உறவு கொண்டுள்ளனர். இதனால் அவனுக்கு எய்ட்ஸ் தாக்கி விடுமோ என்று அஞ்சுகிறோம்.

இங்கு எய்ட்ஸ் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே ஆண்களும், பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் எதற்காக அந்த மாணவன் தாக்கப்பட்டான் என்பது தான் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+