பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்-இலங்கை செல்வோருக்கு அரசு அறிவுரை
சென்னை: இலங்கையில் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் அங்கு செல்லும் தமிழக சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கைக நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் பயணம்செய்யும்போது பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள இலங்கை அரசு மருத்துவமனையை அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.
இலங்கைக்கு பயணம் செய்யத் தொடங்குவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பு ஏஎச்1என்1 நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவும்.
இந்த நோய்க்கான தடுப்பு ஊசி சலுகை விலையில் கிண்டி கிங் நிலையத்தில் வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications