அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!-சோனியா காந்தி
டெல்லி: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நிலமோசடி போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மும்பையில் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது. இதனால் அசோக் சவான் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதே போல் பல்வேறு மாநிலங்களில் நில மோசடி முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் சிலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள காங்கிரசாருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "உங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள், நில மோசடி போன்ற முறைகேடுகளில் ஈடுபடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications