இன்று போகிப் பண்டிகை-சென்னையை மூடிய புகை மூட்டம்
சென்னை: இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் மக்கள் பழைய பொருட்களை வீடுகளின் முன்பு போட்டு தீவைத்துக் கொளுத்தியதால் புகை மூட்டமாக மாறியது.
பொங்கல் பண்டிகை இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று, போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வீடுகள் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொளுத்தி போகியைக் கொண்டாடினர். பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நாளை தை முதல் நாள் என்பதால் வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை அகற்றி, தை மாதத்தை வரவேற்பது இதன் தாத்பரியம் ஆகும்.
போகிப் பண்டிகையையொட்டி மக்கள் பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்திதால் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது. பனி மூட்டம் வேறு சேர்ந்து கொண்டதால் சென்னையில் விமானப் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.
டயர் உள்ளிட்டவற்றை தீயிட்டுக் கொளுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் மக்கள் அவற்றைத் தவிர்த்தனர்.












Click it and Unblock the Notifications