சிங்கள கடற்படையைக் கண்டித்து நாகையில் 2 ஆயிரம் மீனவர்கள் ஸ்டிரைக்
நாகை: இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டியும் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செலலாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது. இவர் ஊனமுற்ற மீனவர் ஆவார்.
தனது இயலாமையை சொல்லி உயிர்ப்பிச்சை கேட்டும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளது இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல்.
கடந்த 12-ம் தேதி தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற 19 வயது மீனவரை இலங்கை ரவுடிக் கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இந்த சோகம் கூட மறையாத நிலையில், மத்திய அரசு உறுதிமொழி அளித்தும் கூட, மீண்டும் ஒரு தமிழக மீனவரை படு கொலை செய்துள்ளது சிங்களக் கும்பல்.
சிங்கள கடற்படையின் இந்த கொடுரக் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வலியுறுதித்தியும் இன்று நாகையில் புஷ்பவனம், வெள்ளபள்ளம், வானவன் மாதேவி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications