திருச்சி-மும்பை இடையிலான ஏர் இந்தியா சேவை திடீர் குறைப்பு
திருச்சி: திருச்சி, மும்பை இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வி்மான சேவை இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மும்பை இடையே தற்போது வாரத்திற்கு 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை பிப்ரவரி 1ம் தேதி முதல் ஒரு விமான சேவையாக குறைத்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மேலாளர் டி.எச்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. தற்போது இந்த மார்க்கத்தில் 60 முதல் 65 சதவீத அளவுக்கு சீட்கள் நிரம்பி வருகின்றன. பயணிகள் ஆதரவும் சிறப்பாகவே உள்ளது.
இதேபோல சென்னை திருச்சி கோலாலம்பூர் தினசரி விமான சேவையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வி்மானம் தினசரி இரவு 11.55 மணிக்கு திருச்சி வந்து, கோலாலம்பூருக்கு நள்ளிரவு 1.20 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மறு மார்க்கத்தில், கோலாலம்பூரிலிருந்து காலை 10.35 மணிக்கு வந்து 11.25க்கு சென்னை புறப்பட்டுச் செல்லும் என்றார்.
குறைந்த கட்டண விமான டிக்கெடுகளை புக் செய்ய












Click it and Unblock the Notifications