ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை: சுஷ்மா ஸ்வராஜ்
நாகப்பட்டிணம்: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் பாஜக கூட்டணி இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பேசி, தமிழக மீனவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என உறுதி பெற்றிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் வரும் 8ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இக் கோரிக்கையை வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்ற கேள்வியே எழவில்லை. தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடுவோம் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.












Click it and Unblock the Notifications