ஸ்பெக்ட்ரம்-ராசாவை காப்பாற்ற கருணாநிதி முயற்சி- ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
ஏரல்: ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கவும், ஆ.ராசாவை காப்பாற்றவும் தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கின்றார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் 'தாமிரபரணியை பாதுகாப்போம்" என்பதை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை பார்த்தாலே அது அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. அது மட்டும் அல்ல பட்ஜெட்டில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கந்து வட்டி, மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், அரிசி கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் என அனைத்து சமூக விரோத செயல்களிலும் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து அதிமுக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து மாநிலக் குழுவில் இறுதி முடிவு செய்யப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கவும், ஆ.ராசாவை காப்பாற்றவும் கருணாநிதி முயற்சி செய்கின்றார். ராசா முதலில் தலித் என்றார். அடுத்து ஆரியர் - திராவிடர் குறித்து பேசினார். பின்பு ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை, இழப்பு தான் என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஆ. ராசா கைது செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
காமன்வெல்த் ஊழலில் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். ஆதர்ஷ் ஊழலில் மஹாராஸ்டிரா முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியும் ஊழலில் மூழ்கியுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications