நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல், வகுப்பு புறக்கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மாணவர் மீது பேருந்து நடத்துநர் பொய்புகார் கொடுத்து கைது செய்ததைக் கண்டித்து நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவரை விடுவிக்கக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள், பஸ் மறியலிலும் ஈடுபட்டனர்.

சங்கரன் கோயில் வழித்தடத்தில் வரும் அரசுப் பேருந்து தொடர்ந்து இரு தினங்கள் கல்லூரி நேரத்தில் பிரேக் டவுனாகிவிட்டதாம். இதனை சட்டக்கல்லூரி முதலாண்டு மாணவர் சுகுமார் எதிர்த்துக் கேட்டுள்ளார். இதில் நடத்துநருக்கும் மாணவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்துள்ளது.

சங்கரன்கோயில் காவல் நிலையத்துக்கு அருகிலேயே இந்த தகராறு நடந்ததால், உடனடியாக பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி, மாணவர் மீது புகார் கொடுத்தார் நடத்துநர்.

பேருந்தின் கண்ணாடிகளை மாணவர் சுகுமார் உடைத்து சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்தார் நடத்துநர். இதன் பேரில் சுகுமார் கைது செய்யப்பட்டு, எப்ஐஆரும் போடப்பட்டுவிட்டது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வகுப்புகளைப் புறக்கணித்தனர். சுகுமாரை விடுவிக்கக் கோரியும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரியும் பஸ் மறியல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இருதரப்பிலும் சமரசப் பேச்சு நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+