பொறுப்பேற்ற அன்றே நெல்லை துணை கமிஷனர் மீண்டும் சென்னைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் பொறுப்பேற்ற அன்றே போலீ்ஸ் துணை கமிஷனர் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டார்.
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக இருந்த அவினாஷ் குமார் ராஜபாளையம் கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை ஐஜி அலுவலக எஸ்பி முரளி நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்பதற்காக நெல்லை வந்தார். அவரிடம் அவினாஷ் கு்மார் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முன்னதாக முரளி சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருக்கும்போதே அவரை சென்னை மனித உரிமை ஆணைய எஸ்பியாக மாற்றியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை வந்து துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், தனது இடத்தில் நியமிக்கப்பட்டுள்ள மாஸ்டர் லியோவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சென்னை திரும்புகிறார்.
மாஸ்டர் லியோ இதுவரை திருச்சி ரயில்வே எஸ்பியாக இருந்தார்.












Click it and Unblock the Notifications