இந்தியா-இலங்கை இறுதிப் போட்டியை காண மும்பை வரும் ராஜபக்சே!

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.
மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.
இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.
அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது.
இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.
இந் நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந் நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications