எம்.ஜி.ஆர். சிலை திறக்கக்கோரி ஜெ. வீட்டுக்கு முன் விரலை வெட்டிய அதிமுக நிர்வாகி
சென்னை: காஞ்சிபுரத்தில் மூடப்பட்டு கிடக்கும் எம்.ஜி.ஆர். சிலையைத் திறக்கக்கோரி ஜெயலலிதா வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் தன்து கை விரலை வெட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் நகர அதிமுக செயலாளராக இருந்தவர் புல்லட் பரிமளம் (45). தற்போது ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக இருக்கிறார். அவர் நேற்று மதியம் 12 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு முன்பு காரில் வந்திறங்கினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மூடியே கிடக்கிறது. அதை உடனடியாக திறக்க வேண்டும். இதை பற்றிய யாருமே ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவில்லை என்று சத்தமாகக் கூறினார். பேசிக் கொண்டிருக்கையிலேயே தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இடது கை விரலை வெட்டினார்.
இதில் அவரது விரலில் ஆழமான வெட்டுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர் வந்த காரிலேயே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறி்த்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications