நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
சிவகங்கை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட நான்கு பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சிவகங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் நேற்று பேசினார். அப்போது அங்கு மேடையில் கட்டப்பட்டிருந்த அனுமதி பெறப்படாத பேனரை அகற்றுமாறு டிஎஸ்பி இளங்கோ உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் பேனர், கட்சிக் கொடிகளை அகற்றினர்.
அதற்கு சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அன்வர்ராஜா, தீனதயாளன், சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீஸில் கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கொலை மிரட்டல் விடுத்தது, அரசுப் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கூட்டம் கூடியது, அனுமதி இல்லாமல் கொடி பேனர் கட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications