சிபிஐ வசம் சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு
டெல்லி: முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.
முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தியிருந்தது. மேலும், அவரது வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தியது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 19-ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் திடீர் தற்கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாதிக் பாட்சாவுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சாதிக் பாட்சாவின் மரண வழக்கை தாங்கள் எடுத்துக் கொண்டதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications