போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆர்.நட்ராஜ், திலகவதி ஓய்வு
சென்னை: தமிழகத்தின் முதல் தமிழ் பெண் டி.ஜி.பி. திலகவதி, டி.ஜி.பி. ஆர். நடராஜ் ஆகியேர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ், தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் டி.ஜி.பி. திலகவதி ஆகியோர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தமிழக காவல் துறையில் 36 ஆண்டுகளும், திலகவதி 34 ஆண்டுகளும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஆர். நட்ராஜ். அவர் சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிக்க் அமைக்கப்பட்டிருந்த அதிரடிப்படைத் தலைவராக இருந்தார். அப்போது வீரப்பனைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்தார். அவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஆகிய பதவிகளில் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அவர் தமிழக சிறைத்துறை இயக்குனராக பணியாற்றியபோது கைதிகளை இனி இல்லவாசிகள் என்று தான் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டி.ஜி.பி.யாகவும் பணியாற்றியுள்ளார்.
நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றபோது தீயணைப்புத்துறை ஊழியர்கள் அவருக்கு மதிய விருந்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வழி அனுப்பு விழா நடத்தினர்.
திலகவதி ஐபிஎஸ் என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் தான் தமிழகத்தின் முதல் தமிழ் பெண் டி.ஜி.பி. எப்படி இந்தியா அளவில் கிரண் பேடி பிரபலமோ அந்த அளவு தமிழகத்தில் பிரபலமானவர் திலகவதி. அவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட. தனது எழுத்துப்பணியும், மக்கள் பணியும் என்றும் தொடரும் என்று நேற்று அவர் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications