மது விற்பனை செய்த பெண் தேர்தல் அலுவலர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள வாக்குச்சாவடி பெண் அலுவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
ஏற்காடு மலையில் உள்ள கீரைக்காடு கிராமத்தில் குழந்தைகள் நல காப்பாளராக பணியாற்றி வருபவர் மலர்க்கொடி. அவர் கூத்துமுட்டல் மலைக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
தேர்தலையொட்டி மதுக்கடைகளை அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மலர்க்கொடி தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மலர்க்கொடியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 பீர் பாட்டில்கள், 64 குவார்ட்டர் மது பாட்டில்கள், 5 புல்' மது பாட்டில்கள், 4 ஆப்' மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து ஏற்காடு போலீசில் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் மலர்க்கொடி கைது செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக வேறொரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications