களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
களக்காடு: களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மான், மிளா மற்றும் காட்டு பன்றிகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் சிவபுரம் பகுதியில் புலி புகுந்து அங்கிருந்த நாய், ஆடுகளை அடித்து கொன்றது. இந்நிலையில் கரடிகளும் கிராமத்துக்குள் வரத் தொடங்கியுள்ளன.
சிவபுரம், கள்ளியாறு, சிதம்பரபுரம் பகுதியில் தற்போது வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மலைப்பகுதிகளிலிருந்து வரும் கரடிகள் வாழை தோட்டங்களில் புகுந்து அவைகளை கீழே தள்ளி சேதப்படுத்தி வருகின்றன. தோட்டத்தில் உளள காவலாளிகள் அவைகளை விரட்டும்போது அவைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications