Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னிடம் கருப்பு பணம் ஒரு பைசா கூட இல்லை: கே.ஜி. பாலகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

KG Balakrishnan
திருவனந்தபுரம்: என்னிடம் கருப்பு பணம் ஒரு பைசா கூட இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தேசிய மனித உரிமை ஆணைய தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் பாலகிருஷ்ணனின் சொத்து விபரங்களை கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வருமான வரித்துறையிடம் விண்ணப்பித்தார். ஆனால் தன்னுடைய சொத்து விபரங்களை வெளியிடக் கூடாது என பாலகிருஷ்ணன் வருமான வரித்துறையை கேட்டுக் கொண்டார். இதை வருமான வரித்துறையும் ஏற்றது.

பின்னர் தனது சொத்து விபரங்களை பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிட்டார். அதில் இந்தியாவில் 6 இடங்களில் தனக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே கொச்சியில் வருமான வரித்துறை ஆணையர் லூக்கோஸ் கூறுகையில், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களிடம் கருப்பு பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடக்கிறது என்று கூறினார்.

கொச்சியில் நேற்று பாலகிருஷ்ணன் கூறியதாவது,

நானோ என்னுடைய உறவினர்களோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை. என்னிடமோ, என்னுடைய உறவினர்களிடமோ கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை ஆணையர் கூறியிருப்பது தவறான தகவல். என்னிடம் கருப்பு பணம் ஒரு பைசா கூட இல்லை. எங்களிடம் இருந்து கருப்பு பணம் எதையும் அவர்கள் கைப்பறறவில்லை. என்னிடம் 30 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது. எனது சகோதர்களுக்கு தமிழ்நாட்டில் நிலம் இருப்பது உண்மைதான். அங்கு ஒருசெண்ட் 500 ரூபாய்க்கு கூட கிடைக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+